ஹோட்டலில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஆசிஷ் கவுட் மீது நடிகை சஞ்சனா புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகையும், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான சஞ்சனா ஹைதராபாத்தில் உள்ள நோவோடெல் ஹோட்டலுக்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடின் மகன் ஆசிஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சஞ்சனா மாதாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
நோவோடெல் ஹோட்டலில் உள்ள பப்பில் ஆசிஷ் கவுட் குடிபோதையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் அவர் என்னையும், மற்றவர்களையும் தாக்கினார். தாக்கியதோடு மட்டும் அல்லாமல் முதல் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிடப் பார்த்தார்.
மது பாட்டிலால் என்னை அடிக்க வந்தார். இதை எதிர்த்தவர்களிடமும் அவர் மோசமாக நடந்து கொண்டார். அங்கிருந்த பவுன்சர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். ஆசிஷின் நடவடிக்கையால் பயந்து போன நானும், என் தோழியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டோம்.
நோவோடெல் ஹோட்டலில் உள்ள பப்பில் ஆசிஷ் கவுட் குடிபோதையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் அவர் என்னையும், மற்றவர்களையும் தாக்கினார். தாக்கியதோடு மட்டும் அல்லாமல் முதல் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிடப் பார்த்தார்.
மது பாட்டிலால் என்னை அடிக்க வந்தார். இதை எதிர்த்தவர்களிடமும் அவர் மோசமாக நடந்து கொண்டார். அங்கிருந்த பவுன்சர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். ஆசிஷின் நடவடிக்கையால் பயந்து போன நானும், என் தோழியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டோம்.