சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேகுகள் இலவசமாக விநியோகம்- மத்திய அரசு முடிவு..

சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


வாகனங்கள் பல வரிசையாக நின்று, பணம் செலுத்துவிட்டு, அதற்கு ரசீது பெற்றுவிட்டு சுங்கச்சாவடிகளை கடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஃபாஸ்டேக் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.


முன்னதாக, ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயமாக்கி மத்திய அரசு அணை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என மத்திய அரசு நம்புகிறது.

அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயம் செய்வது குறித்த உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துவிட்டது. எனினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை.